இலங்கையில் செயற்படுகின்ற சில இணையத்தளங்களை முடக்கும்வகையில் மர்மநபர்களால் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக கொழும்பை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் முன்னணி இணையத்தளங்கள் பதினொன்று இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிந்திய தகவல்களின்படி குவைத்தில் உள்ள இலங்கைத் தூதுவரலாயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தாக்குதலுக்கான காரணம் தொடர்பிலோ தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பிலோ விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.
இருப்பினும் தாக்குதல் சம்பவத்தினை இலங்கை அவசர கணிணி நடவடிக்கைப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.