Saturday 20th of April 2024 05:52:22 AM GMT

LANGUAGE - TAMIL
தீ வைக்கப்பட்ட வெசாக்கூடுகள்
வெசாக்கூடுகளுக்கு தீ வைத்த இளைஞர்கள்..!

வெசாக்கூடுகளுக்கு தீ வைத்த இளைஞர்கள்..!


500 வெசாக் கூடுகள் அடங்கிய தொகுதியொன்று காட்சிபடுத்துவதற்கு பொலிஸார் மறுத்ததனால் குறித்த வெசாக் கூடுகளை இளைஞர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் சாலியவெவ பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நேற்று சாலியவெவ பிரதேசத்தில் பௌத்த மற்றும் கத்தோலிக்க இளைஞர்கள் இணைந்து வெசாக் கூடு தொகுதியொன்றை தயார் செய்திருந்த நிலையில் அவற்றில் ஒரு புறம் பௌத்தர்களின் சின்னமும் மறுபுறம் கத்தோலிக்கர்களின் சிலுவை சின்னமும் பொறிக்கப்பட்டமையால் அங்கு முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.

இதன்பின்னர் பொலிஸாரால் குறித்த வெசாக் கூடுகளை காட்சிபடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மேலும் முரண்பட்டுக்கொண்ட இளைஞர்கள் தாம் தயாரித்த வெசாக் கூடுகளை வீதியில் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE