களனியில் வெசாக் தின நிகழ்வில் பங்கெடுத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலினால் தேசிய வெசாக் பண்டிகையினை கொண்டாடாமல் இருக்க முடியாது. அனைவரும் தைரியமாக செயற்பட வேண்டும்.
நிலைமைகளை வெற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ச ஷரியா பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசுடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
அவ்வாறான நடவடிக்கை எடுப்பதற்கு தமது தரப்பு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.