அப்படி ஒரு நிலைதான் பிரபல நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசருக்கு ஏற்பட்டுள்ளது.
வயதான பெற்றோரை நாசர் கவனிக்கவில்லை என்று அவரது சகோதரர்கள் பஞ்சாயத்துக்கு மணி அடித்துள்ளனர். இதுகுறித்து நாசரின் தம்பிகள் ஜவஹர், ஆசிப் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போதுதான் இந்த பஞ்சாயத்து புகைச்சல் எழுந்துள்ளது.
எங்கள் அண்ணன் நாசருக்கு நடிக்க விருப்பம் என்று தெரிந்து எங்கள் தந்தை அவரை சின்ன வயதில் இருந்தே நடிக்க சேர்த்து விட்டார். ஆனால் மிகவும் வயதான நிலையில உள்ள அவர்களை நாசர் தற்போது கண்டுக் கொள்வதில்லை. அவர் கோடி, கோடியாக சம்பாதித்தாலும் எங்களுக்கு எதுவும் செய்ததில்லை. அவர் எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். வயதான பெற்றோரை வந்து பார்த்து சென்றால் கூட போதும்.
அதை கூட செய்யவிடாமல் தடுப்பது கமீலா நாசர்தான். அவரது மகன்களை கூட எங்களுக்கு அறிமுகம் செய்தது இல்லை. அந்தளவிற்கு எங்களை ஒதுக்கி வைக்கும் அளவிற்கு செய்துள்ளார். எங்கள் பெற்றோரை அண்ணன் நாசர் கவனிக்காவிட்டால் நடிகர் சங்கத்தில் புகார் செய்வோம். உண்ணாவிரதம் இருப்போம். நீதிமன்றத்தில் புகார் செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
கோலிவுட்டில் தற்போது இந்த பஞ்சாயத்துதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.