Friday 29th of March 2024 02:39:06 AM GMT

LANGUAGE - TAMIL
புத்தளம் இளைஞர் திருநெல்வேலியில் கைது!

புத்தளம் இளைஞர் திருநெல்வேலியில் கைது!


நேற்று 10 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்த தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வர்த்தக நிலையங்கள், பொதுக் கட்டடங்கள், மற்றும் வீடுகள் என அனைத்துப் பகுதிகளும் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டன. சம்பவத்தின் போது திருநெல்வேலி கருவப்புலம் பகுதியில் வீடு ஒன்றில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் வியாபாரத்தின் பொருட்டு அங்கு தங்கிருந்ததாகவும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ற கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE