இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் சர்வதேச நாட்டுத் தலைவர்கள் கவலைவெளிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரித்தானியப் பிரதமர் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். பிரித்தானியா பிரதமர் தெரேசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் உயிரிழந்த அனைவரையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இலங்கையுடனான எமது உறவு முக்கியமானது,
குறிப்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமைதியான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவது முக்கியமான ஒன்றாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.