Thursday 25th of April 2024 02:04:45 PM GMT

LANGUAGE - TAMIL
பஞ்சாப் மருத்துவமனையில் துப்பாக்கிச் சண்டை
பாகிஸ்தான் பஞ்சாப் மருத்துவமனையில் இருகுழுக்களிடையே துப்பாக்கிச் சண்டை!

பாகிஸ்தான் பஞ்சாப் மருத்துவமனையில் இருகுழுக்களிடையே துப்பாக்கிச் சண்டை!


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாகா ஷக் என்ற கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இருப்பினும் மருத்துவமனையிலும் இருதரப்பினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவானது. இதில் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் உயிரிழந்னர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சண்டையால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் உருவானது. மருத்துவர்கள்இ நோயாளிகள் என அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சிதறி ஓடினர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மருத்துவமனையை சுற்றிவளைத்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையை தொடர்ந்து உடனடியாக நங்கானா சாஹிப் மாவட்டத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். . அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. ஆகவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE