வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் வடமாகாணத்திற்கு ஒரே ஒரு வைத்தியரே கடமையாற்றுவதாகவும் ஒரு நிரந்தர பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நான்கு தற்காலிக ஊழியர்களுடன் பணியாற்றுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால் நடை வைத்திய அதிகாரி பா. கிரிதரன் தெரிவித்துள்ளார்.
தற்காலிக உத்தியோகத்தர்களை வைத்துக்கொண்டு ஆபத்தான வேலைகளை மேற்கொள்ள முடியாது அவர்களுக்கு காப்புறுதி இல்லை எனவே எமது திணைக்களத்திற்கு நிரந்தர உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர். காடுகளுக்குச் சென்று வைத்தியம் மேற்கொள்வது என்பது சிரமமானதுடன் மாடுகளுக்கு சிகிச்சையளிப்பது போன்றதல்ல சரியாக கவனமாகவும், எளிமையாகவும் மேற்கொள்ளவேண்டும்.
இந்நிலையில் வடமாகாணத்திலிருந்தே உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று வடபிராந்திய வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால் நடை வைத்திய அதிகாரி பா. கிரிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.