வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு உள்ளூர் சேவைகள் வந்து செல்வதற்கு இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆளுனரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வவுனியா கண்டி வீதியிலுள்ள விகாரையில் வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், இலங்கை போக்குவரத்து சபையினர், பிரதேச செயலாளர், நகரசபைத்தலைவர், பிரதேச சபைத்தலைவர், நகரசபை உறுப்பினர்கள், பொலிசார், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போது இந்நடைமுறையை எதிர்வரும் திங்கட்கிழமை 24.06.2019 முதல் பின்பற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுனரினால் வவுனியா பழைய பேருந்து நிலையம் குறித்து ஆய்வறிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று வடமாகாண ஆளுனர் மேற்கொண்ட கலந்துரையாடலின்போது இம்முடிவு எட்டப்பட்டுள்ளதுடன் அனைத்துத்தரப்பினரும் இணைந்து இவ் உத்தரவை நடைமுறைப்படுத்துமாறும் ஆளுனரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.