ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இன்று புதன் கிழமை (19) மாலை மன்னாரில் நினைவு கூரப்பட்டுள்ளது.
மன்னாரில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மன்னார் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது அமரர் தோழர் பத்ம நாபாவின் உருவப்படத்திற்கு மாலை அணுவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது வடமாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளர் பற்றிக் வினோ , கட்சியின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.