2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்துள்ளார். அந்தவகையில் அவர் இன்றைய தினம் ப்ளோரிடா மாநிலத்தில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினார். குறித்த பிரசாரத்தை காண சுமார் 20 ஆயிரம் பேர் புளோரிடாவின் ஓர்லாண்டோ நகரில் திரண்டனர். இதன்போது, மக்கள் முன் உரையாற்றிய அவர், எதிர்வரும் நான்கு வருடங்களுக்காக தம்மை மீண்டும் தெரிவு செய்யுமாறு கோரியுள்ளார். ‘மேலும் நான்கு ஆண்டுகள்’ மற்றும் ‘அமெரிக்கா’ எனவும் டிரம்பின் ஆதரவாளர்கள் உற்சாகமாய் ஆரவாரம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ட்ரம்ப், ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்த் தகவல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். எதிர்கட்சிகள் நாட்டை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார். வீழ்ச்சி போக்கை சந்தித்திருந்த நாடு தமது ஆட்சிகாலத்தில் ஸ்திரதன்மையை அடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்