Thursday 28th of March 2024 04:15:57 PM GMT

LANGUAGE - TAMIL
என் படங்கள் சரியாக ஓடாததால் சினிமாவை விட்டு விலக இருந்தேன்; விக்ரம்

என் படங்கள் சரியாக ஓடாததால் சினிமாவை விட்டு விலக இருந்தேன்; விக்ரம்


சேது படத்திற்கு முன்பு என் படங்கள் சரியாக போகாததால் திரையுலகை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தேன் என்று ஓப்பனாக தெரிவித்துள்ளர் நடிகர் விக்ரம்.

நடிகர் விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் ரிலீசாகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் பேசியதாவது:

சேது படத்தில் நடித்தபோது உடல் மெலிய வேண்டும் என்று கூறினர். அதற்காக ஒரு சப்பாத்தி, ஒரு அவித்த முட்டை, கேரட் ஜூஸ் மட்டும் சாப்பிட்டேன். படப்பிடிப்பு தளத்துக்கு 8 கிலோமீட்டர் நடந்தே சென்றேன். கல்லூரி நாட்களில் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி 4 ஆண்டுகள் எனக்கு 23 அறுவை சிகிச்சைகள் நடந்தன.

எனது வாழ்க்கையை சேதுவுக்கு முன்னால் சேதுவுக்கு பின்னால் என்று பிரிக்கலாம். சேதுவுக்கு முன்பு எனது படங்கள் நன்றாக போகவில்லை. எனவே சேது தோற்றால் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தேன்.

ஆனால் அந்த படம் கொடுத்த வெற்றியால் இன்னும் நான் உற்சாகமாக சினிமாவை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறேன். கடாரம் கொண்டான் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் என்னை பாராட்டி பேசினார். இதனால் கண்கலங்கி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


Category: சினிமா, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE