Wednesday 1st of May 2024 05:07:41 PM GMT

LANGUAGE - TAMIL
இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெளியேற்றும் எரிகுழம்பு

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெளியேற்றும் எரிகுழம்பு


இத்தாலியில் உள்ளது எட்னா என்கிற எரிமலை. இந்த எரிமலையிலிருந்து அடிக்கடி எரிகுழம்புகள் வெடித்து வெளியேறும். ஆனால் சமீபகாலமாக அமைதியாக இருந்த இந்த எட்னா எரிமலை தற்போது வெடித்து எரிகுழும்புகளை வெளியேற்றி வருகிறது. இதனால் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இத்தாலியில் உள்ளது எட்னா எரிமலை. இந்த எரிமலை தற்போது செந்நிற எரிகுழம்பு மற்றும் கரும்புகையை வெளியேற்றி வருகிறது. இதையடுத்து இதன் அருகில் உள்ள கட்டானியா, காமிஸோ ஆகிய இரு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்த எட்னா எரிமலையிலிருந்து அடிக்கடி எரிகுழம்புகள் வெளியேறும் என்பதால் மக்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த மலையிலிருந்து எரிகுழம்புடன் தீப்பொறிகள் வெளியேறும் காட்சிகள் மிகப்பெரிய மத்தாப்பூவை பற்ற வைத்தது போல் உள்ளது. அதனை மலையடிவார பகுதிகளில் இருந்த பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE