Friday 19th of April 2024 03:47:25 AM GMT

LANGUAGE - TAMIL
வவுனியா புளியங்குளத்தில்  வீட்டுக்கிணற்றிலிருந்து  ஆயுதங்கள் மீட்பு

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு


வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை இரரணுவத்தினர் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இரரணுவத்தினர், பொலிஸார் இணைந்து ஆயுதங்களை மீட்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இதன்பொது விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 81 எம். எம். குண்டுகள் 11, ரி. 56 துப்பாக்கி மிதி வெடி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயப்பகுதி (வருவாய்த்துறை) செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இத் தேடுதலானது ஓமந்தையின் 563 ஆவது பிரிகேட்டின் கேணல் பண்டுக்க பெரேரா மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி நிசந்த ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE