கனடாவின் மொன்றியல் மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு திருமுருகன் கோவிலின் வருடாந்த ரதோற்சவம் சிறப்புற நடைபெற்றுள்ளது.
கனடாவில் பரந்து வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆண்டும் முருகன்கோவில் திருவிழாவில் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
பறவைக்காவடிகள், காவடிகள், பாற்செம்புகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
இந்த ஆலயம் இருபத்தைந்து ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், கனடா வாழ் இந்துக்களின் வழிபாட்டுக்காகவும் ஆரம்பிக்கப் பெற்ற முதல் மூன்று ஆலயங்களில் ஒன்றாகவும் விளங்கிவருகின்றமை குறிப்பிடத்த்ககது.