Friday 19th of April 2024 10:30:29 PM GMT

LANGUAGE - TAMIL
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் மலிங்க!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் மலிங்க!


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்

பங்களாதேஷ் அணியுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தனது ஒருநாள் தொடர் ஓய்வு குறித்து உத்தியோகபூர்வமாக காணொளிப் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.

எனவே 26 ஆம் திகதி தனது இறுதி போட்டியை கண்டுகளிக்க அனைவரையும் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர் வரை இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக மலிங்க ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் லசித் மலிங்க பங்களாதேஷ் அணியுடனான இத் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் குறித்த ஓய்வு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையிலேயே இன்றைய தினம் மலிங்கவின் ஒருநாள் தொடர் ஓய்வு குறித்து உத்தியோகபூர்வமாக காணொளிப் பதிவினூடாக அறிவித்துள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE