எப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பியாவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெப்பத்தை தாங்க முடியாமலும், இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் சுற்றுலா பயணிகள் ஆஸ்திரியாவில் உள்ள பனிப்பாறை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. இந்த வெயில் தாக்கத்தால் அவதிக்குள்ளாகும் மக்கள், ஆஸ்திரியாவில் உள்ள டச்ஸ்டெயின் என்ற பனிப்பாறைக்கு சுற்றுலாவாக வருகின்றனர்.
3,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த பனிப்பாறைக்கு ரோப் கார்களில்தான் பயணம் செய்ய வேண்டும். இப்படி பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பனிப்படர்ந்த இடத்தில் விளையாடி மகிழ்கின்றனர். தங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி வளர்ப்பு பிராணியான நாய்களையும் அழைத்துச் செல்கின்றனர்.