கிளிநொச்சி வட்டக்கச்சியில் படையினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரனின் இல்லத்தின் முன்பாகவே இவ்வாறு அதிகளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேடுதலின் பொருட்டே இவ்வளவு படையினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளிவருகின்றன. இதற்காக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், அங்கு நோயாளர் காவு வண்டி ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.