Friday 19th of April 2024 05:29:51 AM GMT

LANGUAGE - TAMIL
நல்லூரில் சி.சி.ரி.வி கண்காணிப்பு வாகனம்!

நல்லூரில் சி.சி.ரி.வி கண்காணிப்பு வாகனம்!


நல்லூர் கந்தசுவாமி கோயிலின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் நடமாடும் சி.சி.ரி.வி. கண்காணிப்பு பொறிமுறையை பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ளது.

வரலாற்றப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா தற்போது இடம்பெற்று வருகிறது. 15 நாள்களை கடந்துவிட்ட நிலையில் முக்கிய திருவிழாக்கள் இனி வரும் நாட்களில் இடம்பெறவுள்ளன. இதனால் பெருமளவிலான மக்கள் நல்லூரில் திரள்வர்.

எனவே பாதுகாப்பை கவனத்தில் கொண்டும் இலகுபடுத்தும் விதத்திலும் நடமாடும் சி.சி.ரி.வி. கண்காணிப்புப் பிரிவை கொழும்பு பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ளது. இவர்களின் இரு கண்காணிப்பு வாகனங்கள் இன்றைய தினம் நல்லூர் ஆலயச் சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE