Friday 19th of April 2024 11:43:51 AM GMT

LANGUAGE - TAMIL
முதல்வரின் காரிலும் சோதனை!

முதல்வரின் காரிலும் சோதனை!


டில்லியில் இருந்து சென்னைக்கு வந்த புதுச்சேரி முதல்வரை அழைத்துச்செல்ல வந்த காரையும் விமான நிலைய பொலிஸார் சோதனை செய்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வி.ஐ.பிக்கள் முதல் சாதாரணமானவர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகின்றது.

அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. விமான நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. இன்று வெள்ளிக்கிழமை காலை டில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

இவரை அழைத்துச் செல்ல கார் வந்தது. இந்த காரையும் விமான நிலைய பொலிஸார் பரிசோதனை செய்த பின்னரே அனுப்பினர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE