Thursday 25th of April 2024 09:55:13 PM GMT

LANGUAGE - TAMIL
மருத்துவரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

மருத்துவரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் மருத்துவர் சிவரூபனை விடுதலை செய்ய வலியுறுத்தி பளை மக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்பகல் 10 மணியளிவல் பளை பிரதேச வைத்தியசாலை முன்பாக ஒன்றுகூடிய மக்கள் மருத்துவரின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக பளை பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

பேரணியில் “விடுதலை செய் வைத்தியரை விடுதலை செய் , நிறுத்து நிறுத்து சட்டத்தின் முன் நிறுத்து ,நீக்கு நீக்கு பயங்கரவாத சட்டத்தி நீக்கு” எனப் பல கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் மருத்துவரை சட்டத்தின் முன் நிறுத்தாத பட்சத்தில் பெருளவிலான தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் மக்கள் அரசியல்வாதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE