வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கொலரா நோயால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் கொலராவுக்கு இங்கு பலியாகியுள்ளதாக சூடான் சுகாதாரத் துறை அமைச்சர் அக்ரம் தெரிவித்துள்ளார்.
சூடானில் தெற்கு – நில் மாகாணத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு அதிகமாக கொலாரா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 7 பேர் பலியாகி உள்ளனர். பலர் இந்த நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கொலாரா நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் அக்ரம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக நடந்து வருவதாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சூடானில் பல இடங்களில் மலேரியா தாக்கமும் இருப்பதாக உலக சுகாதாரத் துறை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டிலும் சூடானில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம், கனமழை காரணமாக கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு பெருமளவானோர் உயிரழந்தை குறிப்பிடத்தக்கது.