Wednesday 24th of April 2024 04:54:34 AM GMT

LANGUAGE - TAMIL
கல்கரி நகர் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

கல்கரி நகர் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு


கனடா - கல்கரி நகரில் வணிக வளாகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆல்டாவின் பால்சாக்கிலுள்ள கிராஸ்ரான் மில்ஸ் வணிக வளாத்தில் கனேடிய நேரம் திங்கட்கிழமை இரவு 7:11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

ஒருவரைக் குறிவைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காயமடைந்தவர் ஒரு ஆண் ஆவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளர். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர் குறித்த மேலதிக தகவல்களை உடனடியாக வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர்.

சுட்டுவிட்டுத் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பை கருத்தில் கொண்டு துப்பாக்கிச் சூடு நடந்த வணிக வளாகத்தில் இருந்து எவரும் உடனடியாக வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

அத்துடன், சம்பவம் இடம்பெற்ற பால்சாக் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு ஆர்.சி.எம்.பி. பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE