Friday 19th of April 2024 05:17:18 PM GMT

LANGUAGE - TAMIL
வவுனியா மதவாச்சியில் யானை தாக்கி ஒருவர் பலி!

வவுனியா மதவாச்சியில் யானை தாக்கி ஒருவர் பலி!


மதவாச்சி பகுதியில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் என மதவாச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணகொல்லேவ குளப்பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இருவர் சென்று கொண்டிருந்த போது காட்டுயானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவரை மீட்டு மதவாச்சி வைத்தியசாலையில் சேர்த்தபோதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சாமர சந்தருவன் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE