Friday 26th of April 2024 01:23:17 PM GMT

LANGUAGE - TAMIL
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்! இளைஞர்கள் இருவர் படுகாயம்!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்! இளைஞர்கள் இருவர் படுகாயம்!


வவுனியா தவசிகுளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில் இன்று மாலை தவசிகுளத்திலிருந்து கோவில்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தவசிகுளம் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது வீதியின் அருகே இருந்த மதகுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 19,21 வயதுடைய மகாறம்பைகுளம் மற்றும், கோவில்குளம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் அவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கபடுகின்றது.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE