பிலிப்பைன்ஸில் லொறி ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 20 பேர் பலியாகினர்.
மேலும் 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திரிபோலி பகுதியில் இன்று இந்த கொடூர விபத்து இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லொறி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட் 20 பேர் பலியாகினர்.
தகவலறிந்து அங்கு வந்த பொலஜார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.