ஆப்கானிஸ்தானில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 31 பேர் காயமடைந்தனர்.
அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
பலியானவர்களில் பெண்களும், குழந்தைகளும் அதிகம். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அருகே இன்று பேரணி வந்தபோது குண்டு வெடித்தது என ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தால் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இரத்தானதன் காரணமாக தலிபான்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.