Tuesday 16th of April 2024 03:21:47 PM GMT

LANGUAGE - TAMIL
நானும் அகதிதான் என்கிறார் தலாய் லாமா!

நானும் அகதிதான் என்கிறார் தலாய் லாமா!


நானும் ஒரு வகையில் அகதி தான் என்கிறார் திபெத்திய பௌத்த மத தலைவர் தலாய் லாமா.

எனினும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நாங்கள் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இமாச்சல பிரதேசம் உனா பகுதியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலாய் லாமாவிடம் இந்தியா மற்றும் திபெத்தில் உள்ள சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.

திபெத்தில் உள்ள சுதந்திரம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், திபெத்தில் சுதந்திரம் என்பது 1974 இல் இருந்து. அதற்கு முன் ஐ.நா.,விடம் நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். அப்போதைய இந்திய பிரதமர் நேரு அறிவுரை வழங்கிய பிறகும் ஐ.நா., அதிகம் ஏதும் செய்யவில்லை. அதற்கு பிறகு சீனர்களை அனுகி பேச்சுவார்த்தை நடத்தினோம். 1974 இல் சுதந்திரம் கேட்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை.

சீனாவில் மக்கள் குடியரசு இருப்பது போல் இருக்க வேண்டும் எனவும் எங்களின் சொந்த கலாச்சாரத்தை நிலை நிறுத்துவதற்கான உரிமையை கேட்க வேண்டும் என நினைத்தோம்.

2001 முதல் நான் முற்றிலுமாக ஓய்வு பெற்றேன். தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைமை முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டது. ஜனநாயகத்தை எப்படி கடைபிடிப்பது? என சீனர்களுக்கு நம்மால் கற்றுத்தர முடியும் என அப்போது நினைத்தேன் எனவும் தலாய் லாமா தெரிவித்தார்.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE