தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தொடரை கைப்பற்றி வெற்றியை ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக கொடுத்துள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் என்ற இமாலய ஸ்கோர் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 275 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
இதனால் பாலோ ஆன்- ஐ சந்திக்கும் நிலைக்கு தென் ஆப்பிரிக்கா தள்ளப்பட்டது. இந்திய அணியை விட 326 ரன்கள் பின்தங்கி இருந்ததால் இந்த நிலை உருவானது. இருப்பினும் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் அட்டகாசமான ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா அணி ஆல்அவுட் ஆனது. இதையடுத்து நேற்றைய 3-வதுநாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்தியா பாலோ-ஆன் எடுக்குமா? அல்லது தொடர்ந்து பேட்டிங் செய்யுமா? என்ற குழப்பமான நிலை நீடித்தது.
இந்நிலையில் இன்றைய 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. அப்போது இந்தியா பாலோ-ஆன் முடிவை எடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இருப்பினும் இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் அதிரடியாகவும், துல்லியமாகவும் பந்து வீசினர். இந்த பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் தொடர்ந்து பெவிலியனுக்கு நடையை கட்டினர். இதனால் விக்கெட்டுக்களை மளமளவென்று வீழ்ந்தது.
முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய மகாராஜ் - பிலாண்டர் ஜோடி 2-வது இன்னிங்சிலும் தங்களின் முழுமையான ஆட்டத்தை காட்டினர். இருப்பினும் இந்த ஜோடியை உமேஷ் யாதவ் தன் பந்து வீச்சால் சிதறடித்தார். இதையடுத்து தென்ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது. இதையடுத்து இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.
இந்திய அணியில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அஸ்வின் 2 விக்கெட்டு வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: