டெஸ்ட் தொடரில் வெற்றிப் பெற்றதை அடுத்து ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றதால் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா அணி தன் வசப்படுத்தி உள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று நிறைவடைந்த புனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதித்துள்ளது. இதனால் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை தன் வசமாக்கி கொண்டது.
இந்த வெற்றியை அடுத்து சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா கிரிக்கெட் அணி அடைந்துள்ளது.
கடந்த 2013 பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்தியா தொடர்ச்சியாக 11 தொடர்களில் வெற்றிப் பெற்று இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா 1994 நவம்பர் முதல் 2000 நவம்பர் வரை தொடர்ச்சியாக 10 தொடர்களையும், 2004 ஜூலை முதல் 2008 நவம்பர் வரை 10 தொடர்களையும் வென்றிருந்தது. இந்நிலையில இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: