பொலிஸ் அனுமதி மறுத்ததால் திரண்டு வந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நடிகர் விஜய்- இயக்குனர் அட்லீ கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவித்துள்ளனர். இதன் டிரெய்லரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டது.
டிரெய்லர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்துள்ளது. டிரைலருக்கு பாலிவுட் ஸ்டார்கள் ஷாரூக் கான், வருண் தவான், விவேக் ஓபராய், இயக்குனர் கரண் ஜோஹர் என்று பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். விஜய் நடிக்கும் படங்களின் டிரெய்லர் வெளியாகும் போது தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் ஒளிபரப்படும்.
இதில் திரளான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டி மகிழ்வர். இந்த நிகழ்ச்சியில் விஜய் நடித்த பல்வேறு படங்களிலிருந்து பாடல்கள், காட்சிகள் திரையிடப்படும். அதேபோல் பிகில் படத்தின் டிரெய்லர் நிகழ்ச்சியை உற்சாகமாக கொண்டாட கோயம்பேட்டில் உள்ள தனியார் திரையரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விஜய் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையில் இந்தக் கொண்டாட்டத்துக்கு காரில் வர வேண்டாம். பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் இந்த கொண்டாட்டத்துக்கு காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டதாம். இதனால் உற்சாகமாக வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் திரையரங்கு டுவிட்டர் பக்கத்தில் ரேவ்நாத் சரண் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் “திரையரங்கத்துக்கு வந்த விஜய் ரசிகர்களுக்கு நன்றி. உங்களுடைய ஆசையை பூர்த்தி செய்ய முடியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. நிறைய செலவு செய்து 10 நாட்களாக இதற்காக திட்டமிட்டோம். கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. ஆனால் எவ்வித பிரச்சினையும் பண்ணாமல் அமைதியாக கலைந்து சென்ற விஜய் ரசிகர்களுக்கு நன்றி. காவல்துறையும் விஜய் ரசிகர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யாமல் இருந்ததற்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது ரசிகர்கள் பொலிசார் தாக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பை விஜய் தெரிவித்து இருந்தார். அதனால் இந்த கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் இருந்திருக்கலாம் என்றும் தகவல்கள் உலா வருகிறது. படத்தின் ரிலீசின் போது இதைவிட பெரிய பிரச்சனைகள் உருவாகலாம் என்றும் கூறுகின்றனர்.