திருகோணமலையில் கைதாகிய கிளிநொச்சி நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வரணிப் பகுதியில் கிளைமோர் குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலையில் கைது செய்யப்பட்ட நபர் முன்னாள் போராளி என்றும் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சியில் உள்ள அவருடைய இல்லத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே. இதனிடையே குறித்த நபரின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோரும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.