முல்லைத்தீவு மாவட்டம் நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தினால் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டதாக மேல் நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா சார்பாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
அதில் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் உதவி அத்தியட்சகர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்கசர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.