தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ப.ஜெயக்காந்தன் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவரது நகர வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயா ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வது தொடர்பாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் யாழ.மாவட்ட முன்னாள் இராணுவத் தளபதியும் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான ஜீ.ஏ.சந்திரசிறியுடன் இணைந்து அவர் கலந்துகொண்டார்.
இதன்போது சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நகர சபை உறுப்பினர் ப.ஜெயக்காந்தன் தலைமையில் கோத்தபாய ரஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரசாரப் பணிகளை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.