எகிப்து நகரமான லக்சாருக்கு அருகே 3000 ஆண்டுகள் பழைமையான எகிப்திய மம்மிக்களுடன் கூடிய மரத்தாலான 30 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சி குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
இதனை அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சகமும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சவப்பெட்டிகளின்மீது பூசப்பட்ட வண்ணம் இன்றும் மங்காது தெரிகிறது.
இந்த பெட்டிகள் நைல் நதியின் மேற்கு கரையில் இருக்கும் தீபன் நெக்ரொபொலிஸில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு அடுக்குகள் கொண்டுள்ளன.
இது தற்போதைய வருடங்களில் கண்டறிந்த மிகவும் முக்கியமான மற்றும் பெரிய கண்டுபிடிப்பு என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த சமயத்தில் வாழ்ந்த மன்னர்கள் குறித்தும், அதன் மூலமாக மக்கள் குறித்தும் புரிந்து கொள்ள இவை உதவும்.
தீபன் நெக்ரோபோலிஸில் இருக்கும் அசாசிஃபில் உள்ள சமாதிகள் பெரும்பாலும் கிமு 664 முதல் 332-ம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த மன்னர்களுடன் தொடர்புடையவை ஆகும்.
ஒரு காலத்தில் தொழிற்சாலைகள் நிறைந்து இருந்த பகுதி ஒன்றினை லக்ஸார் மேற்கு சமவெளியில் கண்டறிந்துள்ளதாக கடந்த வாரம் தொல்பொருள் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இந்த பகுதியில் சேமிப்புக்கான வீடு மற்றும் 18-ம் சாம்ராஜ்யத்தின் நாட்கள் குறிக்கப்பட்ட பானைகளும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Category: கலை & கலாசாரம், பகுப்பு
Tags: