யாழ்ப்பாணம் ,கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள வீடொன்றில் மூன்று பிள்ளைகளின் தாயொருவரின் உடல் வெட்டுக்காயங்களுடன் கொலையுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது .
கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையாக வீட்டில் தனித்திருந்த 61 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை அல்லது கடந்த இரவு இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.