கனடாவின் மேற்கு மாகாணமான சஸ்காட்செவன் முதல்வர் ஸ்கொட் மோ கனேடியப் பிரதமரை நேற்று ஓட்டாவாவில் சந்தித்துப் பேசினார்.
எனினும் அந்தச் சந்திப்பு குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், ட்ரூடோவிடம் புதிதாக எந்தத் திட்டங்களும் இல்லை. மேற்கத்திய தேவைகளை நிவர்த்தி செய்வதில் அவரிடம் போதிய அர்ப்பணிப்பைக் காண முடியவில்லை எனத் தெரிவித்தார்.
மாகாண மக்களின் முக்கிய விருப்பங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். எனினும் அவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான உறுதிப்பாடுகளைக் காண முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
சஸ்காட்செவன் மாகாணத்தின் தொழில்துறை அபிவிருத்திக்கும், மாகாண மக்களின் முன்னேற்றத்துக்குமாக பிரதமர் ட்ரூடோ கொண்டுள்ள திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளவே இந்தச் சந்திப்பில் பங்கேற்றேன் எனவும் முதல்வர் ஸ்கொட் மோ குறிப்பிட்டார்.
கனடாவில் மேற்கு மாகாணங்களான ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் பிரிவினைவாத 'வெக்ஸிட்' கோஷம் குறித்து அடிமட்டங்களில் அதிகம் பேசப்பட்டபோதும், தனது மாகாணம் கனடாவின் ஒரு அங்கமாகமே இருக்கும் என சஸ்காட்செவன்ட் முதல்வர் தெரிவித்தார்.
அனைத்து மாகாணங்களின் ஒன்றிணைவே எங்கள் தேசத்தின் வலிமை என்று மோ கூறினார்.
இதேவேளை, இந்தச் சந்திப்புக்குப் பின்னர் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் தலைவரை கனேடியர் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ சந்தித்துப் பேசியமையும் குறிப்பிடத்தக்கது.