Wednesday 24th of April 2024 06:02:15 AM GMT

LANGUAGE - TAMIL
முல்லைத்தீவு – மல்லாவி திருநகர் பகுதியில்  துப்பாக்கிச்சூடு

முல்லைத்தீவு – மல்லாவி திருநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு


முல்லைத்தீவு – மல்லாவி திருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்

இன்று அதிகாலை 4. 30 மணியளவில் இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த 24 வயதான கமலநாதன் சபேசன் என்ற இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடியன் என உள்ளூரில் அழைக்கப்படும் கட்டுத்துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE