சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்பட்டது.
கிளிநொச்சி கருணாநிலைய மண்டபத்தில் குறித்த நிகழ்வு 10.30 மணியளவில் இடம்பெற்றது. “வெறுப்பு பேச்சை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் விழுதுகள் அமைப்பினால் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர் குழாத்தினரும், கிளிநொச்சி மாவட்ட அமரா பெண்கள் அமைப்பும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்விற்கு விழுதுகள் அமைப்பு அனுசரணை வழங்கியிருந்தது. இதன்போது குறித்த தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மனித உரிமைகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.