கொழும்பில் இனந்தெரியாத நபர்களினால் வெள்ளைக் காரில் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியிடம் இன்றும் 4 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை 9 மணிக்கு முன்னிலையாகிய குறித்த பெண் அதிகாரி வாக்குமூலம் அளித்துவிட்டு பிற்பகல் 1.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் அவர் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.