வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் இவ் வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் 8 ஆம் இடத்தினை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வவுனியா வடக்கு கல்வி வலயம் பல்வேறு துறைகளிலும் சாதித்து வரும் நிலையில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த சித்தி மட்டத்தினையும் முதல் மூன்று மாணவர்களில் ஒருவவராவும் சித்தியடைந்து வருகின்றனர்.
இந் நிலையில் 2019 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் கணிப்பீட்டின் அடிப்படையில் புதுக்குளம் பாடசாலை தேசிய மட்டத்தில் 8 ஆம் இடத்தினை பெற்றுள்ளது.
இதேவேளை வட மாகாணத்தில் உள்ள 12 வலயங்களில் வவுனியா வடக்கு வலயம் புலமைப்பரிசில் பரீட்சையில் 5 ஆம் இடத்தினை பெற்று முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.