யாழ்.நகரின் மையப்பகுதியில் நிறுப்பட்டிருந்த சிங்கள பௌத்த கொடி இளைஞர்களால் அகற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ். பஸ்நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ் சிங்கள பௌத்த அடையாளத்தை வெளிப்படுத்துகின்ற கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் குறித்த கொடி அந்தப் பகுதியில் திரண்ட இளைஞர்களால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.