அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள், பெண் ஒருவர் என நான்கு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரையும் சிறுவன் ஒருவரே சுட்டுக் கொன்றதாகவும் அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள கிராண்ட்ஸ்வில்லே நகரத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றது.
இது குறித்து விசாரணை நடத்திவந்த பொலிஸார், நால்வரையும் சுட்டுக் கொன்றவர் ஒரு சிறுவன் எனவும் அவரைக் கைது செய்துள்ளதாகவும் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட சிறுவன் கொல்லப்பட்ட குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய உறவுமுறை உடையவர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொல்லப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சுட்டுக்கொன்ற சிறுவன் குறித்த விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
இந்தத் துப்பாக்கிச் கூட்டுக் சம்பவம் மிகவும் கொடூரமானது, சோகமானது என உட்டா ஆளுநர் கேரி ஹெர்பர்ட் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்கள் துப்பாக்கிகளை சிறுவர்களிடம் இருந்து பாதுகாப்பாக கையாளுங்கள். உங்கள் சிறுவர்களுடன் அன்பைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அவர்களை வெறுக்காமல் அரவணைத்து அன்பு செலுத்துங்கள் எனவும் அந்த ரூவிட்டர் செய்தியில் உட்டா ஆளுநர் கேரி ஹெர்பர்ட் கூறியுள்ளார்.