கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் இல்ல மாணவிகளான தர்சினி மற்றும் கிருசாந்தி ஆகியோரின் நடன அரங்கேற்ற நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு மாலை 2.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை கலாசார மண்டபத்தின் இராசநாயகம் அரங்கில் இடம்பெற்றது.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மக்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதை அடுத்து மாணவிகளிற்கான ஆசிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அரங்கேற்றம் இடம்பெற்றது.