கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து ஜப்பானின் யோஹாமோ துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருந்து 11 பேர் பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
சொகுசு கப்பலில் இருந்து விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட பேருந்தில் ஏற்றப்படுவதற்கான பயணப்பாதை முற்றிலுமாக மூடப்பட்டு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.