Saturday 20th of April 2024 10:04:52 AM GMT

LANGUAGE - TAMIL
இந்திய நடை ஓட்ட வீராங்கனை ஒலிம்பிக்கிற்கு தகுதி!

இந்திய நடை ஓட்ட வீராங்கனை ஒலிம்பிக்கிற்கு தகுதி!


ஜப்பான் ரோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டித் தொடரில் 20 கிலோ மீட்டர் நடை ஓட்டம் பிரிவில் பங்கேற்பதற்கு இந்திய வீராங்கனை பாவனா தகுதி பெற்றுள்ளார்.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 24 வயதான பாவனா ஜாட் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய நடை ஓட்ட பந்தயத்தில் 20 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 29 நிமிடங்கள் 54 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்ததுடன் ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றுள்ளார்.

நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் நடை ஓட்டப் போட்டிக்கான தகுதி நேர வரையறையாக 1 மணி நேரம் 31 நிமிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியொன்றில் பங்கேற்ற பாவனா பந்தைய தூரத்தை 1 மணி நேரம் 38 நிமிடங்கள் 30 வினாடிகளில் கடந்திருந்திருந்த போதிலும் தற்போது சிறந்த பெறுபேற்றை அடைந்து ஒலிம்பிக்கிற்கும் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE