Friday 19th of April 2024 03:49:17 AM GMT

LANGUAGE - TAMIL
அணித்தலைவர் பொறுப்பில் இருந்து டூபிளெஸ்ஸி திடீர் விலகல்!

அணித்தலைவர் பொறுப்பில் இருந்து டூபிளெஸ்ஸி திடீர் விலகல்!


தென்னாபிரிக்க டெஸ்ட் மற்றும் ரீ-20 கிரிக்கெட் அணிகளுக்கான தலைமைப் பொறுப்பில் இருந்து டு பிளெஸ்ஸி விலகியுள்ளார். அணித் தலைமை பொறுப்பில் இருந்து விலகினாலும் தொடர்ந்தும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த முடிவை எடுப்பது கடினமாக இருந்தது. அதே சயமயம் புதிய அணித்தலைவர் குயின்டன் டீ கொக்கிற்கு முழு ஆதரவை வழங்குகிறேன். டெஸ்ட், ஒருநாள், ரீ-20 என மூன்று வகையான கிரிக்கெட ஆட்டங்களிலும் தொடர்ந்து விளையாடவுள்ளேன். அணியின் வெற்றிகளுக்கு பங்களிக்கவுள்ளேன் எனவும் டு பிளெஸ்ஸி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் தலைமையேற்று 18 வெற்றியையும் 15 தோல்வியையும் அடைந்துள்ளார். டு பிளெஸ்ஸி தலைமைவகித்த 39 ஒரு நாள் ஆட்டங்களில் 28 வெற்றியையும், 37 ரீ-20 போட்டிகளில் 23 வெற்றியையும் தென்னாபிரிக்க அணிக்காக பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டு பிளெஸ்ஸி விலகியுள்ள நிலையில் தென்னாபிரிக்க அணியின் அனைத்து வகையான கிரிக்கெட் அணிக்கு தற்போதைய ஒருநாள் அணி தலைவர் குயின்டன் டீ கொக் தேர்வுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE