Wednesday 24th of April 2024 10:44:58 PM GMT

LANGUAGE - TAMIL
லைக்கா நிறுவனத்தின் மீது 4 வழக்குகள்!

லைக்கா நிறுவனத்தின் மீது 4 வழக்குகள்!


இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட விபத்து தொடர்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கவனக்குறைவு காரணமாக மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் பாரம் துக்கியை இயக்கிய ரமேஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவாகியுள்ளதையடுத்து காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் இணை இயக்குநர் குமார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பாரம் தூக்கி உரிமையாளர் மற்றும் தயாரிப்பு நிர்வாகி மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE