Friday 29th of March 2024 05:26:38 AM GMT

LANGUAGE - TAMIL
உமர் அக்மலுக்கு இடைக்காலத் தடை!

உமர் அக்மலுக்கு இடைக்காலத் தடை!


பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான உமர் அக்மல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கபட்டுள்ளது.

அண்மையில் தேசிய கிரிக்கெட் அக்கடமியில் உடல்தகுதிக்கான சோதனையின் போது அநாகரிகமாக நடந்துகொண்டதாக உமர் மக்மல் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தவறான புரிதல் காரணமாக இந்த குற்றச்சாட்டு எழுந்ததாக பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.

ஊழல் தடுப்பு ஆணையத்தால் அண்மையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உமர் அக்மல் சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவர் மீதான விசாரணை நடைபெற்று வருவதால் மேற்கொண்டு எதனையும் தெரிவிக்க பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.

இவ் இடைக்காலத்தடை காரணமாக இந்த வாரம் பாக்கிஸ்தானில் ஆரம்பமாக இருக்கும் பி.எஸ்.எல். போட்டியில் விளையாட முடியாத நிலை அக்மலுககு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE