வவுனியா மகிழங்குளத்தில் பொருத்து வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று இடம்பெற்றது.
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா ஒமந்தை மகிழங்குளத்தில் அமைக்கப்படவுள்ள பொருத்து வீட்டிற்கான அடிக்கல்லினை பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் நாட்டிவைக்கப்பட்டது.
பன்னிரண்டு லட்சத்து என்பதாயிரம் ரூபா செலவில் இவ் பொருத்து வீடு அமைக்கபடவுள்ளதுடன் முதற்கட்டமாக இருபது வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் இவ்வீடுகள் பதினான்கு நாட்களில் இருந்து மூன்று வாரத்திற்குள் பூரணப்படுத்தி மக்களிற்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.
மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேனவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழு தலைவர் தர்மபால செனவிரத்தின, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கினைப்புக்குழு தலைவர் கனகரட்னம், வவுனியா பிரதேச செயலாளர் கமலதாஸ், செட்டிக்குளம் பிரதச செயலாளர் சிவகரன், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.